பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா துவக்கம்



 பெண்ணாடம்; பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7:00 மணிக்கு மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், 8:30 மணிக்கு கோ பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (2ம்தேதி) சூரிய பிறை – சந்திர பிறை, 5ம் தேதி அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், 7ம் தேதி சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம், முக்கிய நிகழ்வான வரும் 9ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 10ம் தேதி தீர்த்தவாரி, 11ம் தேதி கொடியிறக்கம், 12ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் தேர் பெருவிழா துவங்கி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்