கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வாழை தண்டு தீப ஊர்வலம்



கோத்தகிரி; கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, வாளை தண்டு தீப ஊர்வலம் நடந்தது.


கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, முதலியார் சமூக மக்கள் சார்பில், கோவை இடுக்கரை கிராமிய பெண்களின் ஆடலுடன், வாழை தண்டு தீப ஊர்வலம் நடந்தது. பகல், 2:00 மணிக்கு, மாவிளக்கு பூஜையும், அபிஷேக அலங்கார மலர் வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, நந்தி வாகனத்தில் எழுந்தருளி, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்