நத்தம்; குட்டூர் அண்ணாமலையார் கோயில் மகா வாராகி அம்மன் சன்னதியில்வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி வாராகி அம்மனுக்கு திருமஞ்சனம், பால், பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கபட்டது.
*கம்பிலியம்பட்டி வர சித்தி வாராகி அம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோயில் ,அசோக்நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வாராஹி அம்மன் சன்னதியிலும் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.