செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை திரு விளக்கு பூஜை நடந்தது. அதை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் அதிகாலையில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரமும் செய்தனர். மாலை 6 மணிக்கு சீதளாபரமேஸ்வரி அலங்காரத்தில் அங்காளம்மன் முதல் சுற்று பிரகாரத்தில் எழுந்தருளினார். அம்மன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். நிறைவாக மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. பெண்களுக்கு மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கினர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், சேட்டு என்கிற ஏழுமலை தலைமையிலான பூசாரிகள், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.