பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம்; ஆக. 1ல் கொடியேற்றம்



பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் ஆக., 1 அன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.


பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பரமசுவாமி அருள்பாலிக்கிறார். ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக உற்சவங்கள் நடக்கிறது. பரமக்குடியின் அழகர் கோயில் என அழைக்கப்படும் நிலையில், ஜூலை 31 இரவு அணுக்கையுடன் விழா துவங்குகிறது. ஆக., 1 காலை 9:15 க்கு கொடி மரத்தில் கருட கொடியேற்றப்படும். இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார். தினமும் பெருமாள் சிம்ம, சேஷ, கருட, அனுமார் வாகனங்களில் எழுந்தருளுவார். ஆக., 6 இரவு யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடாகி, ஆண்டாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு வேண்டுவோர் நேர்த்திக்கடன் செலுத்துவர். மறுநாள் பூ பல்லக்கில் பவனி வருவார். ஆக., 8 காலை தவழும் கண்ணனாக முத்து பல்லக்கில் உலா வந்து வைகை ஆற்றில் இறங்குவார். அன்று வைகையில் பவுர்ணமி நிலா ஒளியில் இரவு 11:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோயிலை அடைவார். மறுநாள் காலை ஆடி தேரோட்டம் நடக்கிறது. ஆக., 10 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்