ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 49 லட்சத்து, 37 ஆயிரத்து, 883 ரூபாய் இருந்தது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், தட்டு காணிக்கை உண்டியல்கள், 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், சலவநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியலில், 29 லட்சத்து, 42 ஆயிரத்து, 295 ரூபாயும், தட்டு காணிக்கை உண்டியலில், 19 லட்சத்து, 95 ஆயிரத்து, 588 ரூபாய் இருந்தது. மொத்தம், 49 லட்சத்து, 37 ஆயிரத்து, 883 ரூபாய் இருந்தது. மேலும், தங்கம் – 34 கிராம், வெள்ளி – 106 கிராமும் இருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தக்கார் பிரதிநிதி ஆனைமலை ஆய்வர் சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.