சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோவிலில் படியளக்கும் உற்சவம்



சேத்தியாத்தோப்பு: கருப்பசாமி கோவில் சித்ரா பவுர்ணமி படியளக்கும் விழாவில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.


சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே உள்ள விநாயகபுரம் கருப்பசாமி கோவில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பவுர்ணமியன்று பக்தர்களுக்கு கைப்பிடி பணம் அளித்து படியளக்கும் உற்சவம் நடந்து வருகிறது. இந்தாண்டு, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, 18ஆம் படி கருப்பண்ண சாமிக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, திரவியப்பொடி உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்று மாலை கருப்பசாமிக்கு மலர் மற்றும் நகை அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. இரவு விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கருப்பசாமி ஆறுமுகம், கைப்பிடியளவு பணம் கொடுத்து, படியளக்கும் உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஏ.வி.கே.எஸ்., புவுண்டேஷன் மற்றும் கருப்பசாமி அறக்கட்டளை யினர் செய்தனர். இதில், 5 ஆயிரத்திற்கும் 


மேற்பட்டோர் பங்கேற்று சாமி வழிபாடு செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்