சிதம்பரம் தில்லையம்மன் கோவிலிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவம்



சிதம்பரம்: சிதம்பரத்தில் தில்லை காளி கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள குளங்களை, நகராட்சி நிர்வாகம் துார் வாரி, நடைபாதை அமைத்து சீரமைத்தனர். கழிவுநீர் தேங்கிய ஞானபிரகாச குளம் துார் வாரிய பின்பு சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்பு நடராஜர் கோவில், தெப்போற்சவ விழா நடந்தது. அதனை தொடர்ந்து தில்லை காளி கோவில் குளமான சிவப்பிரியை குளம் துார் வாரி கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆண்டு வைகாசி பெருவிழாவையொட்டி 35 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று தெப்போற்சவம் நடந்தது. முன்னதாக கடந்த 7ம் தேதி இரவு விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும், பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதி உலா நடந்து வந்தது. கடந்த 15 ம் தேதி தேர் திருவிழா நடந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு, தில்லை காளி கோவில் அருகில் உள்ள சிவப்பிரியை தீர்த்த குளத்தில், தெப்ப உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு திருஊஞ்சல் உற்சவம் நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்