கோவை ; காஞ்சி மகா பெரியவரின் 133-வது ஜெயந்தி 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுஷம் நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை கோவை சிங்காநல்லூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள சுவாமிநாதன் ஈவன்ட்ஸ் அண்ட் மேனேஜ்மண்ட் சார்பில் கோவை ராமநாதபுரம் சாதனாலயா அரங்கில் நடத்தினர். இதில் கோவையை சேர்ந்த வீணை வித்வான் நீலகண்டன் ஸ்வர நர்த்தனா புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சங்கீத கலாநிதி நெய்வேலி சந்தான கோபாலன் தலைமையில் நடந்தது சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் ஸ்ரீ சங்கரராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தொடர்ந்து மதியம் பல்வேறு இசை கலைஞர்கள் பங்கேற்ற சங்கீத நிகழ்ச்சி நடைபெற்றது நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.