மீனாட்சி கோயிலில் ஆகமவிதிமீறல் எனக்கூறி திருஞானசம்பந்தர் குருபூஜையை புறக்கணித்த மதுரை ஆதினம்



மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குரு பூஜையில் கருத்து மோதல் காரணமாக மதுரை ஆதினம் பங்கேற்காமல் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இக்கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவத்தின் ஒருபகுதியாக திருஞானசம்பந்தர் குரு பூஜை  நடந்தது. மதுரை ஆதின மடத்தை தோற்றுவித்தவர் என்பதால், தற்போதைய ஆதினத்தை கோயில் நிர்வாகம் ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்துச்செல்வது வழக்கம். இன்று பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு பூஜை செய்து, ஆவணி மூலவீதிகள் வழியாக 63 நாயன்மார்களுடன் ஊர்வலம் நடந்தது. முன்னதாக கோயில் திருப்பணிகள் நடப்பதால் ஞானசம்பந்தர் உட்பட 63 நாயன்மார்கள் ஊர்வலம் நடப்பது ஆகமவிதி மீறல் என ஆதினம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் கோயில் நிர்வாகம் ‘ஆகம விதிமீறல் அல்ல’ என தெரிவித்ததால் கோபமடைந்த மதுரை ஆதினம்  மீனாட்சி கோயிலில் நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜையை புறக்கணித்தார்.

இதுகுறித்து ஆதினம் தரப்பில் கேட்டபோது ‛ திருப்பணிக்காக பாலாலயம் செய்த பிறகு சுவாமி (திருஞானசம்பந்தர்) புறப்பாடு நடக்கக்கூடாது. ஆனால் சுவாமி புறப்பாடு நடந்துள்ளது. இது ஆகமவிதிமீறல். அதனால் ஆதினம் செல்லவில்லை’ என்றனர். கோயில் தரப்பில் கூறியதாவது: பொதுவாக கோயில் பிரதான வாயிலான ராஜகோபுரம் வழியாகதான் சுவாமி புறப்பாடு நடக்கும். அந்த கோபுரத்திற்கு பாலாலயம் செய்தால் அதன் வழியாக சுவாமி புறப்பாடு நடக்கக்கூடாது என்பது ஆகமவிதி. ஆனால் மீனாட்சி கோயிலை பொறுத்தவரை சுவாமி புறப்பாடு அம்மன் சன்னதிக்கு செல்லும் அஷ்டசக்தி மண்டபம் வழியாகதான் நடக்கிறது. வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு இது. சித்திரை திருவிழாவில் தினமும் இந்த வழியாகதான் அம்மனும், சுவாமியும் சென்று வந்தனர். சுவாமி புறப்பாடுக்காகவே இன்னும் அஷ்டசக்தி மண்டபத்திற்கு பாலாலயம் செய்யப்படவில்லை. ஆகஸ்ட் இறுதியில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்