நாகதோஷத்தை போக்கும் நாகேந்திர சுவாமி கோவில்



கர்நாடகாவின், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள குக்கே சுப்ரமண்யா, பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் உள்ள காடி சுப்ரமண்யர் கோவில்கள், நாகதோஷத்தை நிவர்த்தி செய்யும் திருத்தலங்களாக விளங்குகின்றன. இந்த கோவில்களுக்கு, அதிகமான பக்தர்கள் வந்து, தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

அபார சக்தி இதேபோன்று, சக்தி வாய்ந்த கோவில் பெலகாவியில் உள்ளது. இக்கோவிலை பற்றி பலருக்கும் தெரியவில்லை. பெலகாவி அருகில், தாரிஹாளா கிராமத்தில் படேகொள்ளா மடத்தில் நாகேந்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள கடவுள், அபார சக்தி வாய்ந்தவர்.

தென் மாவட்டங்களுக்கு குக்கே சுப்ரமண்யா கோவில் போல, வட மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பரிகார நிவர்த்தி தலமாக இக்கோவில் விளங்குகிறது.

நாகதேவர் சிலை மீது, அரிசியை துாவி பிரார்த்தனை செய்தால், எப்படிப்பட்ட கடுமையான நாகதோஷம் இருந்தாலும், நொடிப்பொழுதில் மாயமாகும் என்பது ஐதீகம். நீண்ட நாட்களாக திருமணம் நடக்காமல் இருப்போர், குழந்தை பிறக்காமல் மனம் நொந்துள்ள தம்பதி, இங்கு வந்து அரிசி துாவி வேண்டுதல் வைத்தால், திருமணம் கைகூடும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நோய் குணமாகும் இங்கு வந்து நாகதேவரை தரிசித்தால், நோய்கள் குணமாகும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு அவதிப்படுவோர் இங்கு வந்து வேண்டினால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

இக்கோவில் நூற்றாண்டுகள் பழமையானதாகும். கோவிலில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. இங்குள்ள மடத்தில் வாழ்ந்த ஆன்மிக தலைவர் நாகேந்திர சுவாமிகள், வெறும் மண்ணை விதைத்து, செடியாக உருவாக்கியவர். அந்த காலத்தில் அவர் வீடு வீடாக சென்று பிரசாதம் வினியோகிப்பாராம். இவரை நாகராஜனின் அவதாரம் என்றே பக்தர்கள் நம்பினர்.

சுற்றிலும் பசுமையான காட்சிகள் நிறைந்த பகுதியில் கோவில் அமைந்திருப்பது, மற்றொரு சிறப்பாகும். மனதுக்கு நிம்மதி, அமைதியை அளிக்கும் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்