உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி உற்ஸவம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்



உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் அருகே வடக்கு பகுதியில் வராகி அம்மன் கோயில் உள்ளது. முன்னோர்கள் சாபம் நீங்கவும், பில்லி சூனியம் இவற்றின் பாதிப்புகளில் இருந்து அகலவும், காரிய வெற்றி அடையவும் நாள்தோறும் இக்கோயிலுக்கு ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.


41 ஆம் ஆண்டு ஆடி உற்ஸவத்தை முன்னிட்டு இன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கோயில் வளாகத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வருகிற ஜூலை 17 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்களின் பால்குடம் புறப்படுகிறது. காலை 10:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலாவும், அதனை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்