பரமக்குடி ஆடி பிரம்மோற்ஸவம்: நவநீதகிருஷ்ணனாக பெருமாள் உலா



பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நவநீதகிருஷ்ணனாக பெருமாள் உலா வந்தார்.


பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஜூலை 26 இரவு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நடந்தது. நேற்று இரவு பூப்பல்லத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உலா வந்தார். நேற்று காலை தவழும் திருக்கோலத்தில் நவநீத கிருஷ்ணனாக முத்து பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பெருமாளுக்கு பக்தர்கள் பால், வெண்ணெய், நெய் வழங்கி தரிசனம் செய்தனர். மதியம் 3:00 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள மண்டகப் படியை அடைந்தார். பின்னர் இரவு 11:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் அமர்ந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீபராதனைகள் நிறைவடைந்து நேற்று அதிகாலை திருக்கோயிலை அடைந்தார். நாளை காலை ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் ரத வீதிகளில் தேரில் வர உள்ளார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்