இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு



கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமை சிறப்பாக சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது.


கள்ளக்குறிச்சி இந்திலி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமையொட்டி, சுவாமிக்கு இன்று காலை 10:30 மணிக்கு வாசணை திரவியங்களால் மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் தேவா குருக்கள் செய்து வைத்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்