பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்



காஞ்சிபுரம்: பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவிலை பழமை மாறாமல் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாகிபேட்டையில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மண்டலேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் உள்ள மூலவர் மழைகாலத்தில் கருமை நிறத்திலும், கோடை காலத்தில் பொன்னிற திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


இக்கோவிலை ஹிந்து சமய அறநிலையத் துறையினர் முறையாக பராமரிக்காததால், கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்து உள்ளது. எனவே, இக்கோவிலை பழமை மாறாமல், புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பூசிவாக்கம், பாவாசாகிபேட்டை மண்டலேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், டெண்டர் விடப்பட்டு விரைவில் திருப்பணி தொடங்கும்’ என்றார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்