திருவேங்கிடபுரத்தில் ஆடி திருவிழா பொன்னியம்மன் வீதி உலா விமரிசை



பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவிலில், 47ம் ஆண்டு ஆடி திருவிழா, கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கரகம் புறப்படுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் காலை, கரகம் புறப்படுதல், கூழ்வார்த்தல் விழாக்கள் விமரிசையாக நடந்தன. தொடர்ந்து, பகல் 2:00 மணிக்கு பெண் பக்தர்கள் அம்மனுக்கு வாடைப்பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபஆராதனைகள் நடந்தன.

இரவு, வாண வேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், கிராமம் முழுதும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆடி திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை நெஞ்சுருக வணங்கி சென்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்