ந.வைரவன்பட்டி பிரம்மோற்ஸவம் வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடு



திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே நகர வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ ஐந்தாம் நாள் வெள்ளி ரத புறப்பாடு நடந்தது. ஆக.,14ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆக.6ல் கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவம் துவங்கி யது. தினசரி காலை வெள்ளிரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

நேற்று ஐந்தாம் நாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு திருத்தேருக்கு முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடந்தது. பின் வயிரவசாமிக்கு யாகசாலை பூஜை நடந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்ஸவ வயிரவர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வெளிப்பிரகாரத்தில் வலம் வந்தார்.

இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. ஆக.,14ல் தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரியும், ஆக.16ல் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்