ஞானகுரு தட்சிணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை



 திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஞானகுரு தட்சிணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.

குரு பகவான் நேற்று மதியம் சரியாக 1: 24 மணியளவில் ரிஷப ராசிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனையொட்டி திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 12 அடி உயரம் உள்ள ஞான குரு தட்சிணாமூர்த்தி குருபீடத்தில் குரு பெயர்ச்சியையொட்டி இன்று காலை 9:30 மணியளவில் விநாயகர் பூஜை, கலச பூஜை, குரு பரிகார ஹோமம் தொடர்ந்து 11:00 மணியளவில் பாலாபிஷேகமும், 12:00 மணியளவில் பரிகார கலச மகா அபிஷேகம், தொடர்ந்து 1:24 மணிக்கு குருபகவானுக்கு மகா சிறப்பு தீபாரதனையும் நடந்தது. விழாவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்