அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோவிலில் திருத்தேர் உத்சவம்



அரும்பாக்கம்; வைகாசி பிரம்மோத்வத்தை முன்னிட்டு, அரும்பாக்கம், சத்திய வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழாம் நாளான இன்று திருத்தேர் உத்வசம் விமரிசையாக நடந்தது.


அரும்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற, சத்திய வரதராஜப் பெருமாள் கோவிலில், 23ம் ஆண்டு, வைகாசி பிரம்மோத்வம், கடந்த 28ம் தேதி துவங்கியது. தினமும் பல்வேறு உத்வசத்தில் சாமி, காலையும், மாலையும், வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதன்படி, இன்று காலை ஏழாம் நாள் உத்சவமான, திருத்தேர் புறப்பாடு நடந்தது. கோவில் வளாகத்தில் புறப்பட்டு, பெருமாள் கோவில் தெருக்கள், பிள்ளையார் கோவில் தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வள்ளூவர் தெரு, அமராவதி தெரு வழியாக, மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. காலை, 7:00 மணிக்கு புறப்பட்ட தேர், மதியம் 1:00 மணிக்கு கோவில் சன்னிதியில் வந்தடைந்தது. தேரை ஏராளான பக்தர்கள் வடம் பிடித்து வழிபாடு செய்தனர். மாலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்