பெரியபட்டினம் குருநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா



பெரியபட்டினம்; பெரியபட்டினத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி சமேத குருநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த ஜூன் 4 அன்று அனுக்கை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமங்களுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, லட்சுமி பூஜைக்கு பிறகு காலை 11:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி, குருநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் கமுதக்குடி பாரதிராஜ் சிவாச்சாரியார் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்