முருகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை



ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் முருகாலம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் விழா, கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, இரண்டாம் நாள் பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை, மஹா பூர்ணாஹீதியை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் முருகாலம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனை நடந்து. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்