அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்



காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா இன்று காலை 10:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் ஜூன் 8 திருக்கல்யாணமும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 11ம் தேதி மாலை நடைபெறுகிறது. ஜூன் 14 தெப்பமும், ஜூன் 15 புஷ்ப பல்லக்கும், விடையாற்றியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முத்துமீனாட்சி, செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்