நத்தம் கைலாசநாதர் கோவிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா



நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் கைலாசநாதர்,செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்து வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, மற்றும் மாலையில் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் இன்று மாலையும், திருத்தேரோட்டம் நாளை 8-ம் தேதி காலையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்