விருதுநகர் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம்



விருதுநகர்; விருதுநகரில் ரெங்கநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நடந்தது. அரங்கநாதன், மகாலட்சுமி திருக்கல்யாணம் காப்புக்கட்டு கொடியேற்றத்துடன் அக். 2ல் துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தனர். பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்