பழநி கோயிலில் ரூ. 132 கோடியே 91 லட்சத்திற்கு கட்டணமில்லா சேவைகள்



பழநி; பழநி கோயில் நிர்வாகம் சார்பில் 2021.,மே.7, முதல் 2026. மார்ச்.8 வரை ரூ. 132 கோடியே 91 லட்சத்திற்கு கட்டணமில்லா சேவைகள் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் கடந்த 2021.,மே.7, முதல் 2026.,மார்ச் 8, வரை பல்வேறு கட்டணமில்லா சேவை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம், முடி காணிக்கை, முதலுதவி சிகிச்சை, கிரி வீதியில் பக்தர்களுக்கு உணவு பொட்டலம், நீர் மோர், நாள் முழுவதும் பஞ்சாமிர்தம், கைக்குழந்தைகளுக்கு பால், நாள் முழுவதும் உணவு பிரசாதம், இலவச திருமணம், பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம், மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல், மாற்றுத்திறனாளிக்கு இலவச ரோப் கார், வின்ச் சேவை, சுக்கு காபி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, சித்த மருத்துவமனை மருத்துவம், மனநல காப்பகம், கிரி வீதியில் பேட்டரி பஸ், கொடைக்கானலில் அன்னதானம், அன்பு இல்ல மாணவர்கள், மற்றும் தமிழ் நாதஸ்வர கல்லூரி, வேத பாடசாலை, அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தொகை, இலவச வாகன நிறுத்துமிடம், காலனி பாதுகாப்பு மையம் என பல்வேறு கட்டணமில்லா சேவைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நிர்வாகம் குறிப்பிட்ட கால அளவில் ரூ 132 கோடியே 91 லட்சத்து 70 ஆயிரத்து 697 மதிப்பில் சேவைகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்