கோவை; மாசி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ரோடு மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.