காஞ்சிபுரம்: காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் துவங்கியது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் நாளை காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில்,தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீத கச்சேரிகள் நேற்று காலை துவங்கின. இதில், வேதவிற்பன்னர்கள் பங்கேற்ற சிறப்பு ஹோமம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகள், ஜெ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹாதீப ஆராதனை உள்ளிட்டவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரின், ஜெயந்தி மகோத்சவ தினமான நாளை, காலை 7:00 மணி முதல், மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், அபிஷேகம், சிறப்பு அலங்கா ரம், மஹாதீப ஆராதனை உள்ளிட்டவை நடக்கிறது.