முருகன் கோவில் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளால் வலுவிழக்கும் அபாயம்



காஞ்சிபுரம்: இளையனார்வேலுார் முருகன் கோவில் சுற்றுச்சுவரை வலுவிழக்க செய்யும் வகையில் வளர்ந்துள்ள அரச செடிகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிச., 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், கோவில் சுற்றுச்சுவரில் அரச செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்செடிகளின் வேர்களால், நாளடைவில் சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழும் சூழல் உள்ளது.

எனவே, இளையனார்வேலுார் முருகன் கோவில் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள அரச செடிகளை வேருடன் அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்