பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ர மணிய சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடந்தது.
ஆடி மாத சுவாதி நட்சத்திரம், சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது.
விழாவையொட்டி, சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், சுப்ரமணிய சுவாமி மற்றும், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் காட்சியளித்தார்.
தொடர்ந்து, மாலையில் கோவில் வளாகத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.