மானாமதுரை சோனையா கோயிலில் ஆடிப்பொங்கல் உற்சவ விழா



மானாமதுரை; மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா கோயிலில் சிவகுலத்தோர் உறவின்முறை சார்பில் நடைபெற்ற ஆடிப்பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு தாயமங்கலம் ரோட்டில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பூஜை பொருட்களை ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க கொண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகுலத்தோர் உறவின் முறையினர் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்