திருக்கோவிலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்



திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருக்கோவிலூர், கீழையூர், மகாமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 9:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, அக்னி காரியங்கள், மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 2:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்துள்ள, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை சாக்கை வார்த்தல் வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்