திண்டிவனம் பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா



திண்டிவனம்: பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நடந்த உறியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


திண்டிவனம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஜென்மாஷ்டமி விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை, 8:30 மணிக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, வீடு தோறும் வெண்ணெய் எடுக்க புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து இரவு 7:30 மணியளவில் கோவில் முன்பு உறியடி திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டிவனம் யாதவ மகா சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்