Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம்>  ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்>

ஐயப்ப தரிசனம்

ஜீவன் என்பது உள்ளவரை...

ஜீவன் என்பது உள்ளவரை...என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை...
ஹரிஹரன் புகழை பாடும்வரை... வாழ்வினில் தோன்றும் சாந்த நிலை... (ஜீவன்...)

கார்த்திகை தோறும் மாலையணிந்து...நாற்பது நாளும் நோன்புமிருந்து...
நாவில் ஐயன் நாமம் பொழிந்து...நடந்தே சென்று கோவில் அடைந்து...
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்...ஒளி மழை தந்தான் என்னிடத்தில்...(ஜீவன்...)

நெய்விளக்காலே அலங்காரம்...கண்டு நெஞ்சில் மறையும் அகங்காரம்...
சரணம் என்னும் ஓங்காரம்...ஓங்காரஸ்வரூபனே...
சரணம் ஐயப்போ...

சரணம் என்னும் ஓங்காரம்...சர்வமும் அதிலே ரீங்காரம்...
ஆசையில் மோதும் அலையாவும்... ஜோதியை கண்டால் தெளிவாகும்... மகர ஜோதியை கண்டால் தெளிவாகும்...(ஜீவன்...)

பம்பை கரையில் அவதரித்தான்... பந்தள நாட்டில் பணி முடித்தான்....
மகிஷியை வென்றே வாழ்வளித்தான்...மழலை வடிவில் அருள்கொடுத்தான்...
அன்னை நோய்க்கும் மருந்தளித்தான்...அகிலமும் வாழவும் துணையிருப்பான்... (ஜீவன்...)

ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்>

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar