திருக்கோஷ்டியூரில் பிரமோத்ஸவ தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்



திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவத்தை நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் வடம் பிடித்தனர்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரையில் பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும்.  ஏப்.14 காலையில் பட்டாச்சார்யர்களால் கொடியேற்றப்பட்டு உத்ஸவம் துவங்கியது. தொடர்ந்து இரவு சிம்ம, அனுமார்,தங்க கருடசேவை, சேஷ, வெள்ளியானை,தங்க குதிரை,அன்னம் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 6:36 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து தேரில் எழுந்தருளிய பெருமாளை வழிபட்டனர். மாலை 4:50 மணிக்கு தேர் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் திரளாக கூடி வடம் பிடித்து தேரோடும் வீதிகளில் வலம் வந்தது. நாளை புஷ்பப் பல்லக்கில் சுவாமி எழந்தருளலுடன் பிரமோத்ஸவம் நிறைவடையும்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்