பதிவு செய்த நாள்
09
டிச
2019
11:12
வடவள்ளி: வடவள்ளி, ஸ்ரீ லட்சுமி விநாயகர் கோவிலில், ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வடவள்ளி - இடையர்பாளையம் ரோட்டில், ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீ லட்சுமி விநாயகர், லட்சுமிபுரி ஈஸ்வரர், லட்சுமிபுரி ஈஸ்வரி, ஆஞ்சநேயர், நவகிரகங்கள் சன்னதி உள்ளது. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, கணபதி ஹோமம் செய்யப்பட்டு, ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, 8:30 மணிக்கு மூலமந்திர ஹோமம், மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, நலம் கொடுக்கும் இறைவன் என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ லட்சுமி விநாயகர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.