அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் நடந்த மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்க, குரு மரியாதை பெருவிழா வில் மயிலம் பொம்மபுர ஆதினம் ஆசியுரை வழங்கினார்.
அவலுார்பேட்டையில் விழுப்புரம் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 12ம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகணேஷ் வரவேற்றார். மாரியம்மன் கோவிலிலிருந்து குருசாமிகள், பக்தர்களின் ஊர்வலத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மாநில செயலாளர் ஐயப்பன் குருசாமிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில கவுரவ தலைவர் ராஜேந்திரன், மாநில இணை செயலாளர்கள் சுவாமிநாதன், ராஜாராமன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், கடலுார் மாவட்ட தலைவர் யாகமூர்த்தி, அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி செயலாளர் ராமசரவணன், மாவட்ட சேவா சங்க செய்தி தொடர்பாளர் அனுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.