விழுப்புரம் பிரம்மாகுமாரிகள் இயக்கம் சேவாதாரிகளுக்கு பாராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2019 04:12
விழுப்புரம் : வளவனுார் பிரம்மாகுமாரிகள் இயக்க ஆன்மிக சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த வளவனுார் மேற்கு அக்ரஹாரத்தில் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் கடந்த 15 ஆண்டுகளாக ஆன்மிக சேவை செய்து வருகிறது. இங்கு தினந்தோறும் காலை 8:00 முதல் 9:00 மணி வரையும், இரவு 7:00 முதல் 8:30 வரை இலவசமாக ஞானஉபதேசம், உலக பிரசித்திப்பெற்ற ராஜயோக தியான பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.இந்த மையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக சேவை செய்த ஈஸ்வரிய சேவாதாரிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. மைய நிர்வாகி செல்வமுத்துகுமரன் தலைமை தாங்கி, சேவாதாரிகளை பாராட்டினார்.