அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2019 12:12
அன்னுார்:அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று 13ம் தேதி நடந்தது.அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், திருவாதிரை நாளன்று, திருவாசகம் வாசித்தல் நடக்கிறது.
இந்த மாத நிகழ்வு நேற்று 13ம் தேதி காலை 7:00 மணிக்கு துவங்கியது.மதியம் 1:15 மணி வரை, சிவனடியார் திருக்கூட்டத்தினர், திருவாசகத்தை முழுமையாக வாசித்தனர். அன்னுார், புளியம்பட்டி, அவிநாசியிலிருந்து சிவனடியார்கள் பங்கேற்றனர்.