""உங்களில் யாராவது தவறு செய்தால் ஒருவருக்கொருவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும். இல்லாவிட்டால் நாக்கினால் சொல்லி திருத்தட்டும். அதுவும் இல்லாவிட்டால் குறிப்பிட்ட நபரிடம் இருந்து விலகட்டும்,” என்கிறார் நாயகம்கைகளால் தடுக்கும் போது எதிராளி சண்டைக்கு வரலாம். அவரைக் கண்டித்தோ, இனிய வார்த்தை மூலம் புத்திமதி சொல்லியோ திருத்தப் பார்க்கலாம். முடியாவிட்டால், தவறு செய்பவருடன் நட்பு வேண்டாம் என விலகலாம். முடிந்தவர்கள் முதல் இரண்டையும், முடியாதவர்கள் மூன்றாவதையும் பின்பற்றுங்கள்.