கோபம், மகிழ்ச்சி, வலிமை என மூன்று உணர்வுகளுக்கு மனிதன் அதிகமாக ஆட்படுகிறான். கோபம் வரும் போது பிறருக்கோ, தனக்கோ துன்பம் தரும் செயலை செய்யாத அளவுக்கு மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மகிழ்ச்சியோடு இருந்தாலும் எல்லை மீறாமல் இருக்க வேண்டும். வலிமையை பயன்படுத்தும் போது, அதன் மூலம் பிறர் பொருளை அபகரிக்க கூடாது.