* பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த லாபமும் இல்லை; நமக்கு தான் பெரிய லாபம் * பணத்தாசை இல்லாமல் நல்லதை செய்தாலே மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். * வாழ்க்கைத்தரம் என்பது பொருள் சார்ந்தது அல்ல. அவரவர் மனதைப் பொறுத்தது. * நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும். * மனக் கட்டுப்பாடு ஒன்றே மனதில் உள்ள அசுத்தங்களைப் போக்கும். * பேராசை கொண்டவர் யாரும் கடவுளின் அருளை பெற முடியாது. * ஆடம்பரக் கல்யாணமும் வரதட்சிணைப் பழக்கமும் ஒழிக்கப்பட வேண்டும். * மனம் எதை இடைவிடாமல் நினைக்கிறதோ அதை அடைந்தே தீரும். * பழைய பாவத்தை கழிப்பதைவிட புதிய பாவங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது. * தினமும் அரை மணி நேரமாவது தியானம் செய்தால் மனம் தெளிவு பெறும். * வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது; மனம் துாய்மையானதாக இருக்க வேண்டும். * குடி கூடாது; அது புத்தியை, குடும்பத்தை கெடுத்து பேராபத்தில் தள்ளி விடும். * பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம். * நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். * ஒரு மனிதனை முழுமையாக திருப்திபடுத்துவது அன்னதானம் ஒன்றே. * எப்போதும் புன்னகை, சாந்த முகம் கொண்டவர் வாழ்வில் குறையேதும் இருக்காது. * காலையில் நாராயணர், மாலையில் மகேஸ்வரரை நினைத்து தியானம் செய்ய வேண்டும். * ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுவது மிகுந்த நன்மை தரும். சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்