பதிவு செய்த நாள்
28
மார்
2020
02:03
ஊத்துக்கோட்டை : கொரோனா வைரஸ் பீதியில் உள்ள மக்கள், தங்களது வீட்டு வாசலில், சாணி தெளித்தும், கடைகளில் வேப்ப இலைகளை கட்டி உள்ளனர்.
வேப்ப இலையின் வாசம் இப்போது தான் வீச துவங்கி உள்ளது.வாசல்படிகளில் மஞ்சள்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சாலைகளில் மக்கள் பெரும்பாலும் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வரை, வீட்டு வாயிலில் மாட்டு சாணம் தெளித்து, வாசல்படிகளில் மஞ்சள் பூசி, குங்குமம் வைப்பர். மா இலை தோரணங்கள் கட்டுவர். சிலர் தங்களது வீட்டு சுவர்களில் மாட்டு சாணத்திலான வரட்டிகளை காய வைப்பர். வெளியே சென்று விட்டு வருபவர்கள், தங்களது கை, கால்களை கழுவி பின், வீட்டிற்குள் செல்வர். காலப்போக்கில், மாற்றம் என்ற பெயரில், மேற்கண்ட கலாசாரங்கள் முற்றிலும் மாறின. வீட்டிற்குள் செல்லும்போது, கை, கால் கழுவுவது, வாசல்படிகளில் பெயிண்டால் ஆன, மஞ்சள், குங்குமம் வைத்தல், வேப்ப இலை, மா இலை கட்டுவது தவிர்த்தல் என, கலாசாரம் முற்றிலும் மாறியது.தற்போது உலகையே அச்சுறுத்தி, மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாட்டு சாணம்இதை கட்டுப்படுத்த மருந்துகள் இல்லாத நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள வீடுகளின் முன், மாட்டு சாணம், மஞ்சள் கலந்த நீர் தெளிக்கின்றனர். கடைகள் முன் வேப்ப இலையை கட்டி வைத்துள்ளனர். கொரோனா ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்தினாலும், தமிழர்களை மறந்து போன இயற்கை முறையை வெளி காட்டத் துவங்கியது.