வீடுகளில் தீபம் ஏற்றி கொரோனோ போரில் வெல்வோம்: மக்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2020 11:04
சீனாவில் உருவாகிய கொரோனா உலகின் பல்வேறு நாடுகளில் மனித உயிர்களை கொத்துக்கொத்தாக காவு வாங்கி வருகிறது. இதை தடுக்க நமதுநாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. நம்நாட்டில் கொரோனாவை தோற்கடிக்க மக்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என காட்ட வேண்டிய நேரம் இது எனக்கூறிய பிரதமர் மோடி அதற்காக இன்று இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் அனைவரும் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்கு, அலைபேசி விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை ஒளிரவிட்டு நம் வலிமையை காட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்ற தேனி மக்கள், தீபம் ஏற்றி ஒற்றுமையை காண்பித்து கொரோனோ போரில் வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.