மலை கிராமத்தில் கோயில் தீர்த்தம், மூலிகை நீர் தெளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2020 11:04
தாண்டிக்குடி , கொடைக்கானல் மலை கிராமமான தாண்டிக்குடியில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மூலிகை நீர் தெளிக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆன்மிக தாய் கிராமமாக தாண்டிக்குடி உள்ளது. இங்குள்ள குடக்கு மந்தையில் பன்னாட்டு தெய்வங்கள் உள்ளன. இதற்கு ஆண்டுதோறும் சிறப்பு பூஜை நடக்கும். நடப்பாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மலை கிராமங்களில் நோய்த்தொற்று ஏற்படாமலும், விவசாயம் செழிக்கவும், மழை பொழிய வேண்டி தாண்டிக்குடி குடக்கு மந்தையில் கரியமால் கோயில் தீர்த்தம் மற்றும் தேவ பொட்டி தலை, வேப்ப இலை, மஞ்சள் மற்றும் மூலிகை செடிகள் ஒன்றாக கலந்து நகர் பகுதியில் தெளிக்கப்பட்டது. இதனால் நகர் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாது என்பது ஐதீகம். தொடர்ந்து மேல்மலை கிராமங்களிலும் இந் நடைமுறை பின்பற்றப்படும். கிராம பட்டக்காரர் கிராம கோயில் மேலாளர் மற்றும் பூசாரிகள் கலந்துகொண்டனர்.