பதிவு செய்த நாள்
01
ஜூன்
2020
05:06
காஞ்சிபுரம் : ஒலிமுகமதுபேட்டையில் கட்டப்படும் பக்தர்கள் தங்கும் விடுதியில் இருந்த கட்டுமான பொருட்கள் திருடப்பட்டதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, அரசு நிதியில், ஒலிமுகமது பேட்டையில், தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டு, அதன் கட்டுமான பொருட்கள், விடுதி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், விடுதியில் வைக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரவில் கடத்தி சென்றனர். இதையறிந்த, பணி கண்காணிப்பாளர், சிவகாஞ்சி போலீசாரிடம், இது குறித்து புகார் அளித்தார். அவர்கள், சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.