சிவதரிசனத்தையே தன்உயிர்மூச்சாகக் கொண்டிருப்பவர்நந்தீஸ்வரர். இவருக்கு விடை, காளைஎன்றும் பெயர்களுண்டு. இவருடையஅனுமதி பெற்ற பின்னரே, சிவபெருமானின் சந்நிதிக்குள் நுழைய வேண்டும் என்கிறது ஆலய தரிசன விதி. சி பக்தர்களில் இவரேதலைமையானவர். சிவனைப் போலவேமூன்று கண்களும், சிவனுக்குரிய மான்மற்றும் மழுவையும்(கோடரி) கையில்ஏந்தியிருக்கிறார். வெள்ளை நிறம்,வெள்ளை உள்ளம் கொண்டவரான நந்தீஸ்வரர், சிவ தியானத்தில்எப்போதும் திளைத்திருப்பார். சைவஆகமநுõல்கள் அனைத்தையும் உலகிற்கு உபதேசித்தவர் இவரே. தர்மத்தின் சொரூபமான நந்தி மீது எழுந்தருளியே சிவன் அடியவர்களுக்கு காட்சியளிப்பார். நாயன்மார் அறுபத்துமூவருக்கும் சிவன் அம்மையப்பராக அம்பிகையுடன் நந்தி மீது எழுந்தருளியே காட்சி தந்துள்ளார்.ஞானசம்பந்தரின் முதல் பாடல், ‘தோடுடைய செவியன் விடையேறி’ என்றே துவங்குகிறது. இதிலிருந்து நந்தியின் பெருமை எந்தளவுக்கு உயர்ந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.சிவரகஸ்யம் என்னும் ஆகம நுõலில் நந்தீஸ்வரரின் பெருமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது.