திருவாடானை: தொண்டி அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி இடையான்வயல் கிராமத்தில் ராமர்பாதம்கோயில் கட்டுமான பணிகள் கொரோனாஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. பாழடைந்துள்ள இக் கோயிலை புதுப்பிக்கஊரகவளர்ச்சிதுறை மற்றும் சுற்றுலாதுறை சார்பில் ரூ. 2 கோடியே60 லட்சம் நிதி ஒதுக்கபட்டது. 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோயிலை சுற்றி அடர்ந்திருந்த சீமைகருவேல செடிகள் மற்றும் புதர்களை புல்லக்கடம்பன் ஊராட்சி சார்பில் அகற்றபட்டு சுத்தம் செய்யபட்டது. கொரோனா ஊரடங்கு நீடித்து வருவதால் கோயில் கட்டும் பணிகள் துவங்க வில்லை.