கண்டாச்சிபுரம்; கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவி லில் உச்சிகால பூஜைகள் நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் அமைந்துள்ள, பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி உச்சிகால பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மூலவர் பாலேஸ்வரருக்கு, லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனையும்,சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச பூஜைகள் நடந்தது.இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உச்சிகால பூஜையில் சமூக இடைவளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத்,ஆலய அர்ச்சகர் கோபி அய்யர் ஆகியோர் செய்தனர்.