தஞ்சை : உலகப் புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சதய விழாவாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 26ந் தேதி சதய நட்சத்திர தினம் வருவதால் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் சதய விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கொரனோ தொற்று பாதிப்பால் சதய விழா இந்தாண்டு மிகவும் எளிமையாக அரசு வழிகாட்டுதல்படி நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் மகா வாராஹி அம்மனுக்கு பால் சந்தனம் திரவியப்பொடி மஞ்சள் தயிர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு சதய விழாவிற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சதய விழா குழு நிர்வாகிகள் தஞ்சை பெரிய கோவில் அதிகாரிகள், பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.