பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த கந்த சஷ்டி நிறைவை தொடர்ந்து, நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியும், இணைய தளம் மூலம் பக்தர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா, 15ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை புஷ்பாஞ்சலியுடன் விழா நிறைவுக்கு வந்தது.இதையடுத்து, நேற்று, காலை, 11:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கும், வள்ளி, தெய்வானையும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.அதை தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது, இதற்கு மாறாக கோவில் நிர்வாகம் இணையதளம் மூலம் நிகழ்ச்சி, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.